பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள ஸ்ரீ பாரதி நகர், சாமி தோட்டம் வாராஹி மந்திராலயத்தில் உள்ள பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு ஏகாதசியை ஒட்டி அபிஷேகம் அலங்காரம் நடந்தது.
பெரியநாயக்கன்பாளையம் அருகே கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட ஸ்ரீ பாரதி நகர், சாமி தோட்டத்தில் வாராஹி மந்திராலயம் உள்ளது. இங்கு இன்று ஏகாதசியை ஒட்டி காலை, 7:00 மணிக்கு இங்குள்ள பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடந்தது. தொடர்ந்து, காலை, 9:00 மணி அளவில் சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது. விழாவில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். கோயில் வளாகத்தில் தினமும் மாலை, 6:30 மணிக்கு மகா வாராஹி ஹோமம் நடக்கிறது. அனைத்து பக்தர்களுக்கும் அன்னபிரசாதம் வழங்கப்படுகிறது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.