நெல்லிக்குப்பம்: ஐயப்பன் கோவிலில் நடந்த சிறப்பு வழிபாட்டில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். நெல்லிக்குப்பம், ஐயப்பன் கோவிலில் வைகாசி மாதம் பிறப்பை முன்னிட்டு, சுவாமிக்கு பால், தயிர், சந்தனம் உட்பட பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சுவாமி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். இதையடுத்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.