தேவதானப்பட்டி: தேவதானப்பட்டி அருகே மஞ்சளாற்றின் கரையில் மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில் உள்ளது.
நேற்று வைகாசி அமாவாசை நாளில் அம்மனுக்கு பொங்கல் வைத்தும், மா விளக்கு எடுத்து வழிபட்டனர். பூஜையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். அம்மன் மலர் அலங்காரத்தில் காட்சியளித்தார்.பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.