புதுச்சேரி: தட்டாஞ்சாவடியில் உள்ள சற்குரு மகான் கணபதி சுவாமிகள் சித்தர் பீடத்தில் 25ம் ஆண்டு மகா குருபூஜையில் பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
தட்டாஞ்சாவடி குடிமைப் பொருள் அலுவலகம் எதிரே உள்ள சற்குரு மகான் கணபதி சுவாமிகள் சித்தர் பீடம் அமைந்துள்ளது. 25ம் ஆண்டு மகா குரு பூஜையையொட்டி, நேற்று முன்தினம் திருவாகம் முற்றோதல், சன்மார்க்க பஜனை மற்றும் தீபாராதனை நடந்தது.
முக்கிய நிகழ்வான நேற்று காலை பிரணவக் கொடியேற்றம் நடந்தது. அதனை தொடர்ந்து, திருப்பள்ளியெழுச்சி, திருவடி புகழ்ச்சி, அருட்பெரும் ஜோதி அகவல், சிவபுராணம் பாராயணம் நடந்தது.
தொடர்ந்து, மகா யாகசாலைத்திருமுறை அடுத்து மதியம் 12:30 மணிக்கு மகா தீபாராதனையில் பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். மாலை சற்குரு மகான் கணபதி சுவாமிகளின் அடியார்களின் பூஜை நடந்தது.