கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, சொலவம்பாளையம் விநாயகர், எருதுகட்டி மாரியம்மன், மாகாளியம்மன் கோவிலில் முதலாம் ஆண்டு விழா நிகழ்ச்சிகள் நடந்தது. கணபதி ஹோமம், அம்மன் திருவீதி உலா நடந்தது. இதைத்தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அதன்பின், சுவாமிக்கு பல்வேறு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர்.