வில்லிவாக்கம் தாமோதர பெருமாள் கோவிலில் தேர் திருவிழா கோலாகலம்



வில்லிவாக்கம்: வில்லிவாக்கத்தில், சவுமிய தாமோதர பெருமாள் கோவிலில், வைகாசி பிரம்மோத்சவ திருவிழா நடந்து வருகிறது. விழாவின் ஏழாவது நாளான இன்று காலை 8:00 மணிக்கு தேரோட்டம் நடந்தது. அலங்கரிக்கப்பட்ட தேரில் சவுமிய தாமோதர பெருமாள் எழுந்தருளினார். பக்தர்கள், வடம் பிடித்து தேரை இழுத்தனர். முக்கிய வீதிகள் வழியாக வந்த பெருமாளை, பக்தர்கள் வழிபட்டனர். இரவு 8:00 மணிக்கு நடந்த கேடய உத்சவத்தில், சிறப்பு அலங்காரத்தில் பெருமாள் எழுந்தருளி, சிறிய மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.


பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்