முத்தாரம்மன் கோவிலில் பிரதிஷ்டை செய்ய கற்சிலைகள் கரிகோல உலா



 மாமல்லபுரம்: திருக்கழுக்குன்றம் அருகே அமையும் முத்தாரம்மன் கோவிலில் பிரதிஷ்டை செய்வதற்காக, கற்சிலைகள் கரிகோல உலா கொண்டு வரப்பட்டன. துாத்துக்குடி மாவட்டம், குலசேகரப்பட்டினம் பகுதியில், முத்தாரம்மன் கோவிலும், அதன் தசரா உத்சவமும் பிரசித்தி பெற்றது. திருக்கழுக்குன்றம் சுற்றுப்புற பகுதி பக்தர்கள், முத்தாரம்மன் வழிபாடு கருதி, இப்பகுதியில் கோவில் அமைக்க முடிவெடுத்தனர்.

முத்தாரம்மன் திருக்கோவில் அறக்கட்டளை நிர்வாகத்தினர், பக்தர்கள் நன்கொடை பங்களிப்பில், திருக்கழுக்குன்றம் அருகில், ஈகைரத்தினாபுரம் புறவழி சந்திப்பு பகுதியில், ஞானபுரீஸ்வரர் சமேத முத்தாரம்மன் கோவிலை, தற்போது அமைக்கின்றனர். மதுரைவீரன் சன்னிதியும் கோவிலில் அமைகிறது. இக்கோவிலில் பிரதிஷ்டை செய்யப்பட உள்ள, சுவாமியர் கற்சிலைகள், மாமல்லபுரம் தனியார் சிற்பக்கூடத்தில் வடிக்கப்பட்டு, அங்கிருந்து நேற்று இங்கு கொண்டு வரப்பட்டடன. கரிகோல உலாவிற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. கரிகோல உலா என்பது கோவில்களில் புதிதாகச் செய்யப்பட்ட சிலைகள், மூலஸ்தானத்தில் பிரதிஷ்டை செய்யப்படுவதற்கு முன், அப்பகுதி மக்களுக்கு அருள்பாலிப்பதற்காக மேற்கொள்ளப்படும் வீதி உலாவாகும். சிலைகளை இந்து முன்னணி அமைப்பினர் வரவேற்றனர். தொடர்ந்து, வேதகிரீஸ்வரர் கோவிலுக்கு கிரிவலம் சென்றும், முக்கிய வீதிகளில் கரிகோல உலா சென்றும் கோவிலை அடைந்தன.

பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்