ஆஞ்சநேயர் கோவிலில் விசேஷ அபிஷேக பூஜை



ஊட்டி: ஊட்டி ஆஞ்சநேயர் கோவிலில் நடந்த அபிஷேக பூஜையில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

ஊட்டி ஆஞ்சநேயர் கோவிலில் வைகாசி மாத கிருஷ்ண பக்ஷ மஹா ப்ரதோஷத்தை முன்னிட்டு தினமும் சிறப்பு பூஜைகள், ஆராதனை நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது.

இதன் ஒரு பகுதியாக ஆஞ்சநேயர் திருக்கோவிலில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ லக்ஷ்மீ நரசிம்ஹருக்கும் சிவபெருமானுக்கும் விசேஷ அபிஷேக பூஜைகள் சிறப்பாக நடந்தது. சிறப்பு பூஜையில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்தனர். வைகாசி மாத கிருஷ்ண பக்ஷ மஹா ப்ரதோஷத்தை முன்னிட்டு தினமும் ஒவ்வொரு பூஜைகளும் சிறப்பாக நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்