நெல்லிக்குப்பம்: திரவுபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
நெல்லிக்குப்பம் அடுத்த மேல்பட்டாம்பாக்கம், திரவுபதி அம்மன் கோவிலில், தீமிதி திருவிழாவை முன்னிட்டு கடந்த, 11ம் தேதி கொடியேற்றப்பட்டது. கடந்த, 10 தினங்களாக தினமும் சிறப்பு அபிஷேகமும், அம்மன் வீதி உலாவும் நடந்தது. நேற்று தீமிதி உற்சவத்தை முன்னிட்டு அர்ஜூனன் சமேதராய் திரவுபதி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருள பூசாரி பூங்கரகத்துடன் தீமிதித்தார். அதை தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் தீமித்து நேர்த்திகடனை செலுத்தினர்.