செஞ்சி அருணாச்சல ஈஸ்வரர் கோவிலில் ஆனி திருமஞ்சனம்



செஞ்சி: செஞ்சி அருணாச்சல ஈஸ்வரர் கோவிலில் ஆனி திருமஞ்சண விழா நடந்தது.

செஞ்சி பீரங்கிமேடு அபித குஜாம்பாள் சமேத அருணாச்சலேஸ்வரர் கோவிலில் திருமறைக்கழகம் சார்பில் இன்று ஆனி திருமஞ்சனம் நடந்தது. இதை முன்னிட்டு அதிகாலை 3 மணிக்கு சிவகாமசுந்தரி உடனுறை நடராஜப் பெருமானுக்கும், மாணிக்கவாசகருக்கும் மஞ்சள், சந்தனம், விபூதி, பன்னிர், வெட்டிவேர் உள்ளிட்ட விசேஷ திரவியங்களை கொண்டு மாக திருமஞ்சனம் செய்தனர். 8 மணிக்கு மகா அலங்காரமும், மகா தீபாராதனையும் நடந்தது. தொடர்ந்து பக்தர்கள் திருவாக பாடல்களை பாடினர், கோலாட்டம், கைலாய வாத்தியங்கள் முழங்க சாமி கோவில் உலா நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர். இதில் திருமறைகழக நிர்வாகள், கோவில் நிர்வாகிகள், சிவனடியார்கள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். 

பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்