ஸ்ரீபெரும்புதுார்: வல்லக்கோட்டை முருகன் கோவிலில், பக்தர்களால் செலுத்தப்பட்ட காணிக்கை உண்டியல்கள் திறந்து நேற்று எண்ணப்பட்டன. இதில், 33 லட்சத்து 84,804 ரூபாய், 25 கிராம் தங்கம், 940 கிராம் வெள்ளி உள்ளிட்டவை வருவாயாக கிடைத்தன.
ஸ்ரீபெரும்புதுார் அருகே, வல்லக்கோட்டையில் முருகன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் உண்டியலில் செலுத்தும் காணிக்கை, மூன்று மாதங்களுக்கு ஒருமுறை எண்ணப்படுவது வழக்கம். அதன்படி, கடந்த பிப்., மாதம் உண்டியல் திறந்து கணிக்கை எண்ணப்பட்டது. இதையடுத்து, காஞ்சிபுரம் ஹிந்து சமய அறநிலையத் துறை துணை ஆணையர் ஜெயா தலைமையில், கோவிலில் உள்ள 10 உண்டியல்கள் திறந்து நேற்று எண்ணப்பட்டன. இதில், 33 லட்சத்து 84,804 ரூபாய், 25 கிராம் தங்கம், 940 கிராம் வெள்ளி வருவாயாக கிடைத்தன. கோவில் நிர்வாக அதிகாரி செந்தில்குமார், அறங்காவலர் குழு தலைவர் செந்தில்தேவ்ராஜ், ஆய்வர் சிவராமகிருஷ்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.