உடுமலை மாரியம்மன் கோவிலில் உண்டியல் எண்ணிக்கை



 உடுமலை: உடுமலை மாரியம்மன் கோவில் உண்டியல்கள் நேற்று திறக்கப்பட்டு, பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்த பணம், நகைகள் எண்ணும் பணி நடந்தது. செயல் அலுவலர் அமரநாதன், பரம்பரை அறங்காவலர் ஸ்ரீதர் மற்றும் அலுவலர்கள், பக்தர்கள் பங்கேற்றனர்.

இதில், மாரியம்மன் கோவில் உண்டியலில், 3 லட்சத்து, 25 ஆயிரத்து, 374 ரூபாய் மற்றும், 9 கிராம் தங்கம், 50 கிராம் வெள்ளி பொருட்களை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். அதே போல், அன்னதான உண்டியலில், 19 ஆயிரத்து, 246 ரூபாய் பக்தர்கள் காணிக்கை செலுத்தியிருந்தனர். மேலும், உபகோவிலான காளியம்மன் கோவில் உண்டியல் திறக்கப்பட்டு, காணிக்கை எண்ணப்பட்ட நிலையில், அதில், 43 ஆயிரத்து, 95 ரூபாய் பக்தர்கள் காணிக்கை செலுத்தியிருந்தனர். சஞ்சீவி பெருமாள் ஆஞ்சநேயர் கோவில் உண்டியலில், 24 ஆயிரத்து, 653 ரூபாய் பக்தர்கள் காணிக்கை செலுத்தியிருந்தனர்.

பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்