மதுராந்தகம் ஏரி காத்த கோதண்ட ராமர் கோவிலில் ஆனி மாத பிரம்மோத்சவ கொடியேற்றம்



மதுராந்தகம்; மதுராந்தகத்தில் உள்ள ஏரி காத்த கோதண்ட ராமர் கோவிலில் ஆனி மாத பிரம்மோத்சவ கொடியேற்றம், இன்று விமரிசையாக நடந்தது.

மூலவர் சன்னதியில் ராமர்- – சீதையை கைப்பற்றியவாறு திருமண கோலத்தில் அமைந்திருப்பது சிறப்பு பெற்ற ஸ்தலமாகும். ஸ்ரீ ராமானுஜருக்கு பஞ்ச சம்ஸ்காரம் செய்த இத்தலத்திற்கு த்வியம் விளைந்த திருப்பதி என மற்றொரு பெயரும் உண்டு. பழமை வாய்ந்த இக்கோவிலில் திருப்பணிகள் முடிந்து, கடந்தாண்டு கும்பாபிஷேகம் விமரிசையாக நடந்தது. அதை தொடர்ந்து ஆனி மாதத்தில் வருடாந்திர பிரம்மோத்சவ விழா, இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனைத்தொடர்ந்து, மாலை 06:00 மணிக்கு சேனை முதல்வர் புறப்பாடு நடந்தது. இந்நிகழ்வில் அறங்காவலர் குழு தலைவர் குமார், கோவில் செயல் அலுவலர் வெங்கடேசன் மற்றும் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றனர். நாளை மாலை கருடசேவை மற்றும் முக்கிய நிகழ்வாக, ஜூலை 1ல், தேரோட்டம் விமரிசையாக நடைபெற உள்ளது. 

பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்