பந்தலுார்: பந்தலுார் ஸ்ரீ முருகன் கோவில் மண்டல பூஜை நிறைவு நாளில் சங்காபிஷேக பூஜை நடந்தது.
பந்தலுார் ஸ்ரீ முருகன் கோவில் அறக்கட்டளை சார்பில், கோவில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. தொடர்ந்து, 48 நாட்கள் மண்டல பூஜை நடைபெற்ற நிலையில் நிறைவு விழா நடந்தது. காலை, 6:00 மணிக்கு கணபதி ஹோமம், லட்சுமி சுப்ரமணியர் ஹோமம், சகல தேவதா ஹோமம் நடத்தப்பட்டு சங்காபிஷேக பூஜை நடந்தது. மேலும், ஓமம் வேதிகா பூஜை நடத்தப்பட்டு, ஸ்ரீ முருக பெருமானுக்கு மகா சங்காபிஷேகம் நடத்தி சிறப்பு அலங்காரத்துடன் தீபாராதனை மற்றும் பூஜைகள் செய்யப்பட்டது. பூஜைகளை கோவில் அர்ச்சகர் ரமேஷ் குருக்கள் தலைமையிலான குழுவினர் செய்திருந்தனர். பூஜையில் பந்தலுார் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்றனர், தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை, தலைவர் ஹரிராமன், செயலாளர் மோகன்ராஜ், பொருளாளர் சிவராஜ் உட்பட பலர் செய்திருந்தனர்.