கோவில் சுவரில் அரசியல் விளம்பரம்: பக்தர்கள் அதிருப்தி



திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவில் மலையடி சுற்றுச்சுவரில், அரசியல் கட்சியினர் விளம்பரங்கள் இடம்பெற்றுள்ளதால், பக்தர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

திருக்கழுக்குன்றத்தில் பிரசித்தி பெற்ற வேதகிரீஸ்வரர் கோவில் உள்ளது.

ஹிந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலில் தினமும் ஏராளமான பக்தர்கள் வழிபடுகின்றனர். மேலும், பவுர்ணமி தினத்தில் கோவில் மலையடிவார பகுதியில் பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர்.

இந்நிலையில், கோவில் வளாக சுவரில் அரசியல் கட்சியினரின் விளம்பரங்கள் இடம்பிடித்துள்ளன. கடந்த சட்டசபை தேர்தலின்போது, இச்சுவரில் வரைந்திருந்த விளம்பரம் அழிக்கப்பட்டது.

தற்போது தி.மு.க.,வினர், மீண்டும் விளம்பரம் வரைந்துள்ளதால் பக்தர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

கோவில் நிர்வாகம், விளம்பரத்தை அழிப்பதோடு, மீண்டும் வரையாமல் தடுக்க, கோவில் சிறப்புக்களை எழுதவேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்