கோவை: மேட்டுப்பாளையம் ரோடு சாய்பாபா கோயிலில் உள்ள நாகசாயி மந்திரில் அருள்பாலிக்கும் நாகசாயிக்கு, சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நேற்று நடந்தன. பட்டுவஸ்திரங்கள், கொய்மலர்கள், சந்தனமாலைகளால் சாய்பாபா அலங்கரிக்கப்பட்டிருந்தார். பாபாவிற்கு தலைப்பாகை அணிவித்திருந்தனர். திரளானோர் வழிபட்டனர்.