திருக்கோவிலூர்: திருக்கோவிலூர், வடிவேல் நகரில் அமைந்துள்ள சீரடி குபேர சாய்பாபா ஆலயத்தில் குரு பூர்ணிமாவை முன்னிட்டு சுவாமி சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார்.
திருக்கோவிலூர் தியாகி வடிவேல் நகரில் உள்ள சீரடி குபேர சாய்பாபா ஆலயத்தின் குரு பூர்ணிமாவை முன்னிட்டு நேற்று மாலை 600 மணிக்கு சுவாமி ரூபாய் நோட்டுக்களால் அலங்கரிக்கப்பட்டு சகஸ்ரநாம அர்ச்சனை, தீபாராதனை நடந்தது. இரவு பக்தர்களுக்கு அன்னதானம் விநியோகிக்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகள் ஆலய நிர்வாகி சுப்பு மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.