சென்னையில் தெய்வச் சேக்கிழார் விழா; திருச்செந்தூர் தல புராணம் வெளியீடு



சென்னை; திருவான்மியூர், சேக்கிழார் ஆராய்ச்சி மையம் மற்றும் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவம் மற்றும் ஆராய்ச்சி பல்கலை இணைந்து நடத்திய 34ஆம் ஆண்டு தெய்வச் சேக்கிழார் விழா, சென்னையில் இன்று நடந்தது இதில் தருமையாதீன பன்னிரு திருமுறை மற்றும் திருச்செந்தூர் தல புராணம் ஆகிய நூலினை தருமபுரம் ஆதீனம் ஸ்ரீஶ்ரீ மாசிலாமணி ஞானசம்பந்த தேசிக பரமாசாரிய சுவாமிகள் வெளியிட முதல் பிரதியினை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பெற்றுக் கொண்டார். விழாவில் ஹேமா மோகன், சேக்கிழார் ஆராய்ச்சி மையத்தின் தலைவர் நீதியரசர் ஜெகதீசன், திருக்கயிலாய பரம்பரை ஸ்ரீலஶ்ரீ சத்தியஞான மகாதேவ தேசிக பரமாசாரிய சுவாமி, சேக்கிழார் ஆராய்ச்சி மையத்தின் செயலர் சிவாலயம் மோகன், ரசிக ரஞ்சனி சபா தலைவர் சந்தானகிருஷ்ணன் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்