ராமாபுரத்தில் உள்ள அரச மர அங்காள பரமேஸ்வரி அம்மன் மற்றும் ராமாபுரம் கன்னியம்மன் கோவிலின் 78ம் ஆண்டு தீமிதி திருவிழா இன்று வெகுவிமரிசையாக நடைபெற்றது. காப்பு கட்டி விரதமிருந்த பக்தர்கள், தீச்சட்டி ஏந்தியும், அலகு குத்தியும், தீ மிதித்தும், தங்கள் நேர்த்திக்கடனை நிறைவேற்றினர். சிறப்பு அலங்காரத்தி்ல் அருள்பாலித்த அம்மனை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.