கடலுார்: கடலுார், புதுப்பாளை யம் தரைகாத்த காளியம்மன் கோவிலில் சாகை வார்த்தல் விழா நடந்தது.
கடலுார், புதுப்பாளையம் தரைகாத்த காளியம்மன் கோவிலில் சாகை வார்த்தல் திருவிழாவை முன்னிட்டு நேற்று காலை முக்கிய வீதிகள் வழியாக கரகம் வீதியுலா நடந்தது. தொடர்ந்து, அம்மனுக்கு மகா அபிஷேகம், சாகை வார்த்தல், மகா தீபாராதனை நடந்தது.
ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். மாலை அம்மன் படையல், இரவு வீரன் படையல் நடந்தது.
ஏற்பாடுகளை பவுர்ணமி விழா குழுவினர் செய்திருந்தனர்.