தரைகாத்த காளி கோவிலில் சாகை வார்த்தல் விழா



கடலுார்: கடலுார், புதுப்பாளை யம் தரைகாத்த காளியம்மன் கோவிலில் சாகை வார்த்தல் விழா நடந்தது.

கடலுார், புதுப்பாளையம் தரைகாத்த காளியம்மன் கோவிலில் சாகை வார்த்தல் திருவிழாவை முன்னிட்டு நேற்று காலை முக்கிய வீதிகள் வழியாக கரகம் வீதியுலா நடந்தது. தொடர்ந்து, அம்மனுக்கு மகா அபிஷேகம், சாகை வார்த்தல், மகா தீபாராதனை நடந்தது.

ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். மாலை அம்மன் படையல், இரவு வீரன் படையல் நடந்தது.

ஏற்பாடுகளை பவுர்ணமி விழா குழுவினர் செய்திருந்தனர்.

பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்