திருக்கோவிலூர்: திருக்கோவிலூர், கீழையூர் தேரடி விநாயகர்க்கு 41ம் ஆண்டு சந்தன காப்பு விழா நடந்தது.
திருக்கோவிலூர், கீழையூர் தேரடி விநாயகர் கோவிலில் 41ம் ஆண்டு சந்தன காப்பு விழாவின் இரண்டாம் நாள் நிகழ்ச்சியாக நேற்று காலை 8:00 மணிக்கு அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், மகா அபிஷேகம், சோடசோபோவுபசார தீபாராதனை நடந்தது. மாலை 6:00 மணிக்கு மூலவர் விநாயகர் தும்பிக்கை ஆழ்வார் அலங்காரத்தில் மகாதீபாராதனை, நாதஸ்வர தவில் இன்னிசை கச்சேரி, தொடர்ந்து உற்சவர் விநாயகர் வீதி உலா நடந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை தேரடி விநாயகர் இளைஞர் குழுவினர் செய்திருந்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.