கமுதி; கமுதியில் ஆடிப்பெருக்கு முன்னிட்டு அரசமரம் வேப்பமரத்திற்கு திருமணம் நடந்தது.
கமுதியில் ஆடிப்பெருக்கு முன்னிட்டு மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் அருகே உள்ள அரசமரம் வேப்பமரத்திற்கு திருமணம் நடந்தது. இதனை முன்னிட்டு யாகசாலை பூஜை துவங்கி கணபதி ஹோமம், கோபூஜை, பூர்ணாஹீதி தீபாரதனை நடந்தது.பின்பு 16 வகையான அபிஷேகம் சிறப்புபூஜை நடந்தது.பருவமழை பெய்து விவசாயம் செழித்து மகசூல் பெற வேண்டி சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க மங்கள இசையுடன் அரசமரம் வேப்பமரத்திற்கு திருமணம் நடந்தது. சுமங்கலி பெண்களுக்கு மாங்கல்யம் வளையல் மஞ்சள் பிரசாதமாக வழங்கப்பட்டது.ஏற்பாடுகளை கமுதி சிவபுராண மகளிர் குழு நிர்வாகிகள் செய்தனர்.விழாவில் கமுதி அதனை சுற்றியுள்ள பகுதியிலிருந்து பலரும் கலந்து கொண்டனர்.