தேய்பிறை சஷ்டி; விருத்தாசலம் கோவில்களில் முருகனுக்கு சிறப்பு பூஜை



விருத்தாசலம்: தேய்பிறை சஷ்டியொட்டி, விருத்தாசலம் கோவில்களில் முருகன் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.


விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் வள்ளி தெய்வானை சமேத சண்முக சுப்ரமணியர், 28 சிவ ஆகம சன்னதியில் உள்ள குமரேஸ்வரர் சுவாமிகளுக்கு நேற்று காலை சிறப்பு அபிஷேகம், சந்தனக்காப்பு அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது. மணவாளநல்லுார் கொளஞ்சியப்பர் கோவிலில் சித்தி விநாயகர், சுவாமிக்கு 12 வகையான பொருட்களால் சிறப்பு அபிேஷகம், வெள்ளிக்கவசம் சாற்றி தீபாராதனை நடந்தது. மாலை 5:00 மணியளவில் சந்தனக்காப்பு அலங்காரத்தில் சுவாமிகள் அருள்பாலித்தனர். இதேபோல், கருவேப்பிலங்குறிச்சி சாலையில் உள்ள வேடப்பர், பெரிய கண்டியங்குப்பம் வெண்மலையப்பர் கோவிலில் சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.


பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்