ஸ்ரீ காசி விஸ்வநாதேஸ்வரர் கோவிலில் 14ல் சீமந்த உத்சவம்



சிவாஜி நகர்: ஆடிப்பூரத்தை ஒட்டி, காசி விஸ்வநாதேஸ்வரர் கோவிலில் வரும் 14ல் விசாலாட்சி அம்மனுக்கு சீமந்த உத்சவம் நடக்கிறது.

ஆடிப்பூரத்தை ஒட்டி, பெங்களூரு சிவாஜிநகர் திம்மையா சாலையில் உள்ள ஸ்ரீ காசி விஸ்வநாதேஸ்வரர் கோவிலில் வரும் 14ம் தேதி காலை முதல் மதியம் வரை ஸ்ரீ விசாலாட்சி அம்மனுக்கு சீமந்த உத்சவம் நடக்கிறது.

அன்றைய தினம் அம்பாளின் மடியில் முளைப்பயிறு கட்டி, சிறப்பு பூஜை செய்து, அதை குழந்தை வேண்டும் தம்பதிக்கு கொடுக்கப்படும். இதன் மூலம் அம்பாளின் ஆசீர்வாதத்துடன் அடுத்தாண்டுக்குள் குழந்தை பேறு உண்டாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

அத்துடன் சுமங்கலி பெண்கள் அனைவருக்கும் வெற்றிலை பாக்கு, வளையல் அடங்கிய தாம்பூலம் வழங்கப்படும் என கோவில் நிர்வாகத்தினர் அறிவித்து உள்ளனர்.

பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்