பெண்ணாடம் பிரளயகாலேஸ்வரர் கோவிலில் ஆடிப்பூர தேர் திருவிழா



பெண்ணாடம்: பெண்ணாடம் பிரளயகாலேஸ்வரர் கோவிலில் 50 ஆண்டுகளுக்கு பிறகு ஆடிப்பூர தேர் திருவிழா வெகு விமரிசையாக நடந்தது. 


பெண்ணாடத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த பாடல் பெற்ற தலமாக அழகிய காதலி அம்மன் உடனுறை பிரளயகாலேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் 50 ஆண்டுகளுக்கு முன் தேர் பழுதானதால் ஆடிப்பூர் தேர் திருவிழா நிறுத்தப்பட்டது. தற்போது, உற்சவர், அம்மன், விநாயகர் ஆகிய மூன்று தேர்கள் புதிதாக அமைக்கப்பட்டு, கடந்த மே மாதம் சித்திரை தேர் திருவிழா நடந்தது. அதனைத் தொடர்ந்து, நிறுத்தப்பட்ட ஆடிப்பூர தேர் திருவிழா கடந்த 5ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினசரி சுவாமி வீதியுலா நடந்தது.  முக்கிய விழாவான தேர் திருவிழாவையொட்டி, இன்று காலை அழகிய காதலி அம்மன் தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடந்தது. ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுந்துச் சென்றனர். இன்று 14ம் தேதி திருக்கல்யாண உற்சவத்துடன் ஆடிப்பூர திருவிழா நிறைவடைகிறது.


பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்