சிறுமுகையில் நாகம்மனுக்கு பால் அபிஷேகம்



சிறுமுகை: சிறுமுகையில் நாகம்மனுக்கு பால் அபிஷேகம் செய்யப்பட்டது.


சிறுமுகையில் நாகம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலின், 44ம் ஆண்டு ஆடிப்பூரம் விழா, கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று காலை சிறுமுகை பேங்க் ஸ்டாப்பில் உள்ள சக்தி விநாயகர் கோவிலில் இருந்து, பக்தர்கள் பால்குடங்களை ஊர்வலமாக, நாகம்மன் கோவிலுக்கு எடுத்து வந்தனர். இதில் ஏராளமான பெண்கள் பங்கேற்று, நாகம்மனுக்கு பால் அபிஷேகம் செய்தனர். மாலையில் திருவிளக்கு பூஜையும் நடந்தது. நாளை காலை, 6:00 மணிக்கு பவானி ஆற்றில் இருந்து, சக்தி கரகம், பால்குடம், தீர்த்தக்குடங்களை, பக்தர்கள் கோவிலுக்கு ஊர்வலமாக எடுத்து வருகின்றனர். நாகம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜை நடைபெறுகிறது. மதியம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட உள்ளது. 15ம் தேதி மஞ்சள் நீராட்டும், சுவாமி திருவீதி உலாவும் நடைபெற உள்ளது. மாலையில் மறு பூஜை நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்து வருகின்றனர்.


பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்