கோவை: விளாங்குறிச்சி ஸ்ரீ காமாட்சியம்மன் கோயில் திருக்குடநன்னீராட்டு விழாவின் ஐந்தாம் ஆண்டு விழாவும், 108 சங்காபிஷேக விழாவும் நேற்று நடந்தது.
காலை 9 மணிக்கு விநாயகர் வழிபாடும், 9:30 க்கு வேள்வியும் துவங்கியது.
11 மணிக்கு 108 சங்காபிஷேகம், காலை 12 மணிக்கு திருக்குட நீராட்டு நடந்தது.
12:30 க்கு பேரொளி வழிபாடும், பகல் 1 மணிக்கு அன்னதானம் துவங்கியது. மாலை 6 மணிக்கு அம்மன் வீதி உலாவில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.