விளாச்சேரியில் கிருஷ்ண ஜெயந்தி விழா; கருட வாகனத்தில் கிருஷ்ணர் உலா



திருநகர்: மதுரை விளாச்சேரி அக்ரஹாரத்தில் உள்ள ஸ்ரீ சைதன்ய விட்டல் மந்திர் வேத குருகுலத்தில் கிருஷ்ண ஜெயந்தி விழா இன்று துவங்கியது.‌ காலை சுப்ரபாதம் முடிந்து யாக பூஜை நடந்தது. மாலையில் கருட வாகனத்தில் வாசுதேவ கிருஷ்ணன், ருக்மணியுடன் புறப்பாடாகினார். இரவு 108 கலச பூஜை துவங்கியது. நாளை காலை கண்ணனை தொட்டிலில் இடும் நிகழ்ச்சியும், பஜனை பூஜை முடிந்து உறியடி உற்ஸவம், கிருஷ்ண லீலைகள் உபன்யாசம் நடக்கிறது. செப். 6 அன்று வாசுதேவ கிருஷ்ணன், ருக்மணி தாயார் திருக்கல்யாணம் நடைபெறும்.


பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்