விழுப்புரத்தில் கிருஷ்ண ஜெயந்தி விழா; உறியடி உற்சவம்



விழுப்புரம்: கிருஷ்ண ஜெயந்தியையொட்டி கிருஷ்ணர் கோவிலில் உறியடி உற்சவம் நடந்தது. விழுப்புரம், வி.மருதுார் பஜனை கோவில் தெரு, சந்தானவேணுகோபால சுவாமி கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு, சிறப்பு வழிபாடு நடந்தது. காலை 8:00 மணிக்கு மூலவர் சுவாமிக்கு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, சிறப்பு அலங்காரத்தில் மகா தீபாராதனை நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து, காலை 9:30 மணிக்கு உறியடி நிகழ்ச்சி நடந்தது.


பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்