செஞ்சி: செஞ்சி பகுதி பெருமாள் கோவில்களில் புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
செஞ்சியை அடுத்த சிங்கவரம் கிராமத்தில் மலை மீதுதுள்ள ரங்கநாதர் கோவிலில், ஸ்ரீதேவி பூதேவி சமேத ரங்கநாதருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. மூலவர் மற்றும் உற்சவர்களுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தன. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. செஞ்சிக்கோட்டை வீர ஆஞ்சநேயர் கோவிலில் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செயதிருந்தனர். செஞ்சிக்கோட்டை வெங்கட்ரமணர் கோவிலில் ஸ்ரீதேவி பூதேவி சமேத வெங்கட்ரமணருக்கும், செஞ்சி பீரங்கி மேடு அருணாச்சலேஸ்வரர் கோவில் வெங்கடாஜலபதிக்கும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.