18ம் நுாற்றாண்டு நடுகல் வரலாற்று ஆய்வாளர் வியப்பு



அவிநாசி: அவிநாசி அருகே கண்டறியப்பட்டுள்ள, 18ம் நுாற்றாண்டை சேர்ந்த நடுகல், வரலாற்று ஆய்வாளர்கள் மத்தியில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகே எம்.நாதம்பாளையம் கிராமத்தில், மாதேஸ்வரன் கோவில் உள்ளது. கோவில் முகப்பில், ஒரு வீரனின் நடுகல் வைக்கப்பட்டுள்ளது. மூன்றரை அடி உயரம், ஒன்றரை அடி அகலத்தில் உள்ள நடுகல்லில் உள்ள வீரனின் சிகை அலங்காரம், இடப்பக்கம் சாய்ந்த நிலையில் உள்ளது.

திருப்பூர் வீரராஜேந்திரன் தொல்லியல் மற்றும் ஆய்வு மைய இயக்குனர் ரவிகுமார் கூறியதாவது: காதுகளில் கடிப்பு வகை அணிகலன், கழுத்துப்பகுதியில் கண்டிகை, வீரத்துக்கு அடையாளமாக வீரச்சங்கிலி அணிந்துள்ளது போன்றும், முழங்கையில் கடக வளை, மணிக்கட்டு மற்றும் பாதத்தில், வீர காப்பும் அணிந்துள்ளது போன்றும் செதுக்கப்பட்டுள்ளது. இடுப்பில், இடை கட்டுடன் தொங்கு நிலை கொண்ட வேலைபாடுடன் கூடிய ஆடை அணிந்து, தனது இடது கையில் துப்பாக்கி, வலது கையில் ஈட்டி வைத்துள்ளது போன்று தோற்றமளிக்கிறது. இருப்பினும், எவ்வித எழுத்துப் பொறியும் அதில் இல்லை. இது, கி.பி., 18ம் நுாற்றாண்டை சார்ந்ததாக இருக்கலாம். நடுகல் காணக்கிடைப்பது, தற்போது அரிதாகி இருக்கிறது. நடுகல்லை பூஜித்து வணங்கினால், ஆபத்து நேரத்தில், முன்னோர் காப்பாற்றுவர் என்பது, கிராமப்புற மக்களின் நம்பிக்கை. இவ்வாறு, அவர் கூறினார்.

வைகுண்ட ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பது எப்படி?

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்