சபரிமலையில் நெய்யபிஷேகம் நிறைவு: சரங்குத்தியில் எழுந்தருளிய அய்யப்பன்

ஜனவரி 20,2020



சபரிமலை: சபரிமலையில் நெய்யபிஷேகம், நேற்று காலை நிறைவு பெற்றது. மண்டல, மகரவிளக்கு காலத்தில் வந்த பக்தர்களை வழியனுப்பும் வகையில், அய்யப்பன் நேற்று இரவு, சரங்குத்தியில் எழுந்தருளினார்.

சபரிமலையில், மண்டல,- மகரவிளக்கு காலத்தில், 60 நாட்களாக நடந்த நெய்யபிஷேகம், நேற்று காலை, 10:30 மணிக்கு நிறைவு பெற்றது. தொடர்ந்து, தந்திரி கண்டரரு மகஷே் மோகனரரு களபபூஜை நடத்தினார். பிரம்மகலசத்தில் களபம் நிறைக்கப்பட்டு, மேல்சாந்தி சுதிர் நம்பூதிரி எடுத்து, கோவிலை வலம் வந்தார். பின், சுவாமிக்கு களபம் அபிஷேகம் நடந்தது; தொடர்ந்து, உச்சபூஜை நடந்தது.நேற்று இரவு, 9:00 மணிக்கு, அய்யப்பன் சரங்குத்தியில் எழுந்தருளினார். தொடர்ந்து, தீப்பந்தம் அணைக்கப்பட்டு, மேளதாளம் நிறுத்தப்பட்டு, அய்யப்பன், மாளிகைப்புறம் கோவில் மணி மண்டபத்துக்கு எழுந்தருளினார். பக்தர்களை அனுப்பி, பூதகணங்களை அழைத்து வருவதாக நம்பப்படுகிறது.

இன்று அதிகாலை, 5:00 மணிக்கு நடை திறந்து, வழக்கமான பூஜைகள் நடந்தாலும், நெய்யபிஷேகம் கிடையாது. இன்று வரும் பக்தர்கள், நெய்யை கோவிலில் கொடுத்து, அபிஷேகம் செய்த நெய்யை, பிரசாதமாக பெற்று செல்லலாம்.இரவு, 10:00 மணிக்கு மாளிகைப்புறத்தம்மன் கோவில் மணி மண்டபத்தில், குருதிபூஜை நடக்கிறது. அதன்பின், பக்தர்களுக்கு தரிசனம் கிடையாது.நாளை காலை, 5:00 மணிக்கு நடை திறந்த பின், 6:30 மணிக்கு, பந்தளம் மன்னர் பிரதிநிதி பிரதீப்குமார் வர்மா முன்னிலையில், கோவில் நடை அடைத்ததும், திருவாபரணங்கள் பந்தளத்துக்கு புறப்படும்.

ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்