கோவை; ராம் நகர் வி. என். தோட்டம் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவிலில் 43 -ம் ஆண்டு சித்திரை திருவிழா கடந்த 22ம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக மூன்றாம் நாளில் கோவில் வளாகத்தில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் மற்றும் குழந்தைகள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் உற்சவர் அம்மன் வெள்ளி காப்பு கவசத்துடன் சிறப்பு புஷ்ப அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.