விழுப்புரம் கைலாசநாதர் கோவிலில் ஏகாதச ருத்ர ஜெபஹோம பாராயணம்



விழுப்புரம்; விழுப்புரம் பிரஹன்நாயகி சமேத கைலாசநாதர் கோவிலில் இன்று ஏகாதச ருத்ர ஜெப ஹோம பாராயணம் நடந்தது. அதனையொட்டி, இன்று காலை 7:00 மணிக்கு கோ பூஜை, விக்னேஸ்வர பூஜை நடந்தது. தொடர்ந்து, 9:00 மணிக்கு சங்கல்பம், 10:00 மணிக்கு கைலாசநாதருக்கு 1,008 தாமரை பூக்களால் சிறப்பு ருத்ர ஹோமமும், 10:30 மணிக்கு ருத்ரா அபிஷேகம், ஜெபம் நடந்தது. பகல் 12:00 மணிக்கு பூர்ணாஹூதி, சுவாமிக்கு மகா தீபாராதனை, 12:15 மணிக்கு சகஸ்ரநாம அர்ச்சனை நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் அப்பகுதி மக்கள் செய்தனர்.


சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்