மழை வேண்டி பல ஆண்டுகளுக்குப் பின்பு சிலையெடுப்பு



சோழவந்தான்; சோழவந்தான் அருகே நரியம்பட்டியில் மழை வேண்டி பல ஆண்டுகளுக்குப் பின்பு  அய்யனார் கோயில் கருப்பசாமி சிலை எடுப்பு விழா நடந்தது. கருப்பசாமி, கன்னிமார், நாய் குட்டி சிலை பூஜாரி வீட்டில் இருந்து எடுத்துவரப்பட்டு ஊர் மந்தையில் கண் திறந்து, பின்பு கோயிலுக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. மழை வேண்டி கிடா வெட்டி பொங்கல் வைத்து வழிபாடு நடந்தது. கிராமத்தினர் ஏற்பாடுகளை செய்தனர். விக்கிரமங்கலம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்