சபரிமலையில் 2026 ஜன.,10 வரை முன்பதிவு நிறைவு; பக்தர்கள் பரிதவிப்பு

டிசம்பர் 12,2025



சபரிமலை; டிசம்பர் 27 மண்டலகாலம் நிறைவு நாள் வரையிலும்,மகர விளக்கு சீசனில் ஜன., 10-ம் தேதி வரையிலும் ஆன்லைன் முன்பதிவு நிறைவு பெற்றுவிட்டது. இனி 11 முதல் 19ஆம் தேதி வரையிலான முன் பதிவு தொடங்கும் நாளை பக்தர்கள் எதிர்பார்த்திருக்கின்றனர்.


மண்டல கால பூஜைகளுக்காக சபரிமலை நடை கடந்த நவ., 16-ம் தேதி மாலை திறக்கப்பட்டது. 17-ம் தேதி கார்த்திகை ஒன்றாம் தேதி முதல் மண்டல கால பூஜைகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஒரு சில நாட்களை தவிர்த்தால் மீதி எல்லா நாட்களிலும் பக்தர்கள் கூட்டம் இங்கு அலை மோதுகிறது. கட்டுக்கடங்கா கூட்டம் காரணமாக ஸ்பாட் புக்கிங் எண்ணிக்கை 20 ஆயிரத்தில் இருந்து 5 ஆயிரமாக குறைக்கப்பட்டது. இதற்கிடையில் டிசம்பர் 27 மண்டல பூஜை தினத்தில் 35 ஆயிரம் பேருக்கும், அதற்கு முந்தைய நாள் 26 - ம் தேதி 30 ஆயிரம் பேருக்கும் ஆன்லைன் அனுமதி வழங்கப்பட்டு நேற்று முன்தினம் மாலை 5:00 மணிக்கு முன்பதிவு தொடங்கியது. சில மணி நேரத்திலேயே அனைத்து நேரங்களுக்கான பதிவும் முடிந்துவிட்டது. தற்போதுள்ள நிலவரப்படி ஜன., 10 வரை முன்பதிவு முடிந்து விட்டது. இனி 11 முதல் 19ஆம் தேதி வரையிலான தரிசனம முன்பதிவுக்கான டிக்கெட் இம்மாத இறுதியில்தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்பாட் புக்கிங் 5 ஆயிரம் மட்டுமே வழங்கப்படுவதால் அங்கு சென்றால் டிக்கெட் கிடைக்குமா? என்ற சந்தேகத்தில் பக்தர்கள் பரிதவிக்கின்றனர்.


சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்