காஞ்சி மகா பெரியவா அனுஷ பூஜை; உலக அமைதிக்காக பிரார்த்தனை



உடுமலை: உடுமலை ஜி.டி.வி., லே–அவுட் செல்வவிநாயகர் கோவில் வளாகத்தில், காஞ்சி மகா பெரியவா அனுஷ பூஜை நடந்தது.


விக்னேச்வர பூஜையுடன் துவங்கி, வேதபாராயணம், காஞ்சி மட ஸ்வஸ்தி வசனம், தோடகாஷ்டகம், விநாயகர் அகவல், சிவபுராணம், திருத்தொண்டர் தொகை, கோளறு திருப்பதிகம், பஞ்சபுராணம், திருப்புகழ் உள்ளிட்ட பாராயணங்கள் நடைபெற்றது. குரு கீதம், நாம ஸங்கீர்த்தனம் மற்றும் எல்லா உபசாரங்களின் முடிவில், தீபாராதனை செய்து பிரசாதம் வழங்கப்பட்டது. உடுமலை மற்றும் சுற்றுப்புற பகுதியில் இருந்து, ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். உலக அமைதிக்கும், சமாதானத்திற்கும், ஒற்றுமைக்கும், ஆரோக்கியத்திற்கும் கூட்டு பிரார்த்தனை செய்யப்பட்டது. அனுஷ பூஜை ஏற்பாடுகளை, செல்வ விநாயகர் கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.


சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்