ஆதிமூர்த்தி பெருமாள் கோயிலில் சித்திரை பிரம்மோற்சவம் துவக்கம்



பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள பழைய புதூர் ஆதிமூர்த்தி பெருமாள் கோயிலில் சித்திரை பிரம்மோற்சவ கொடியேற்று விழா நடந்தது.  விழாவையொட்டி நேற்று காலை, 7:00 மணிக்கு கொடியேற்றும் நிகழ்ச்சி நடந்தது. மாலை அன்ன வாகன உற்சவம் மற்றும் நாம சங்கீர்த்தனம் மற்றும் பஜனை நிகழ்ச்சி நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இன்று மாலை, 4:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவம், மாலை, 6:30 மணிக்கு சேஷ வாகன திருவீதி உலா நடக்கிறது. செவ்வாய்க்கிழமை மாலை, 6:30 மணிக்கு கருட வாகன உற்சவம், நாம சங்கீர்த்தனம், பஜனை நடக்கிறது. புதன்கிழமை காலை, 9:00 மணிக்கு தீர்த்தவாரி நிகழ்ச்சியும், தொடர்ந்து கொடி இறக்குதல் நிகழ்ச்சியும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை ஆதிமூர்த்தி பெருமாள் கோயில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.


சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்