திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் வாசவி கன்னிகா பரமேஸ்வரி ஜெயந்தியை முன்னிட்டு அம்மனுக்குசிறப்பு வழிபாடு நடந்தது. திருக்கோவிலூர் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் வாசவி கன்னிகா பரமேஸ்வரி ஜெயந்தியை முன்னிட்டு நேற்று காலை கலச ஸ்தாபனம், பக்தர்கள் ஊர்வலமாக பால்குடம் எடுத்து வந்தனர். தொடர்ந்து ஹோமம், 10:00 மணிக்கு மூலவர் மற்றும் உற்சவருக்கு விசேஷ அபிஷேகம், அலங்காரம், மகாதீப ஆராதனை நடந்தது. மாலை 6:00 மணிக்கு மூலவர் சிறப்பு அலங்காரத்தில் சோடசோபவுபச்சார தீபாராதனை, உற்சவர் ஊஞ்சல் சேவையில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இரவு சுவாமி ஹம்சவாகனத்தில், வான வேடிக்கையுடன் வீதி உலா நடந்தது. இதில் பக்தர்கள் மற்றும் ஆரிய வைசிய சமூகத்தினர் பலரும் கலந்து கொண்டனர்.