Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு ஹரிஹரபுத்ர சுவாமி திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
அருள்மிகு ஹரிஹரபுத்ர சுவாமி திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: ஹரிஹரபுத்ர சுவாமி
  ஊர்: மரத்துறை
  மாவட்டம்: தஞ்சாவூர்
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  அனைத்து வியாக்கிழமையிலும் சிறப்பு பூஜை நடைபெறுகிறது.  
     
 தல சிறப்பு:
     
  குழந்தைகள் பக்தர்களாக வேண்டிக்கொண்டு பிரார்த்தனை நிறைவேற்றுவது சிறப்பு.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 7 மணி முதல் 1 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு ஹரிஹரபுத்ர சுவாமி திருக்கோயில் மரத்துறை, கும்பகோணம்.  
   
    
 பொது தகவல்:
     
  ஆலயத்தில் உள்ளே நுழைந்து, நீண்ட நடைபாதையைக் கடக்கும்போது இடதுபுறம் கதையினால் ஆன காவலாள் அருகே இருக்க குதிரைச் சிலையைப் பார்க்கலாம். தொடர்ந்து நடந்தால் மகாமண்டபத்தை அடையலாம். பலிபீடம் இடையில் இருக்க அர்த்த மண்டபத்தின் நுழைவாயிலில் இடதுபுறம் பிள்ளையாரும். வலதுபுறம் முருகனும் அருள்பாலிக்கின்றனர்.  
     
 
பிரார்த்தனை
    
  தங்களது கோரிக்கை நிறைவேற வேண்டும் என பிரார்த்தினை செய்கிறார்கள். 
    
நேர்த்திக்கடன்:
    
  சிறுவர்கள் பால்காவடி எடுத்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர் 
    
 தலபெருமை:
     
 

தன்னை நாடி வந்து பிரார்த்தனை செய்யும் பக்தர்களின் குறைகளை குறிப்பாக சிறுவர்களின் கோரிக்கைகளை உடனுக்குடன் நிறைவேற்றுவதில் இந்த இறைவனுக்கு நிகரில்லை என்று பக்தர்கள் மெய் சிலிர்த்துக் கூறுகின்றனர்.

இங்கு சிறு குழந்தைகளே பக்தர்களாக வேண்டிக் கொள்வதும் புதுமையாக உள்ளது. இந்த கோயில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. ஆலயத்தின் உள்ளே நுழையும் முன் இடதுபுறம் அருள்பாலிக்கும் விஷ்ணு துர்கையை நாம் கண்குளிர தரிசனம் செய்யலாம். பொதுவாக தேவகோட்டத்தின் தென் திசையில் அருள்பாலிக்கும் துர்கை, இங்கு கோயிலின் நுழைவாயிலிலேயே வடதிசை நோக்கி நின்ற கோலத்தில் அருள்பாலிக்கும் அழகே அழகு. சிறிய தனி மண்டபத்தில் அருள்பாலிக்கும் துர்கையை வணங்குவோர் சற்றே குனிந்து பார்த்தால்தான் அன்னையின் முழு உருவமும் தெரியும். அதாவது தன்னைப் பார்த்து தலை வணங்குபவர்களுக்கே அன்னை தரிசனம் தருகிறாள் என்பது உண்மை.

இங்கு இறைவனுக்குக் காவி உடையே உடுத்தப்படுகிறது. வெள்ளை உடையை பக்தர்கள் கொடுத்தாலும் அதை காவியில் நனைத்து, காவியாக்கி, பிறகே இறைவனுக்கு அணிவிக்கின்றனர். இதனால் இந்த இறைவனுக்கு சன்னியாசி அப்பன் என்ற இன்னொரு பெயரும் உண்டு. பல நூறு ஆண்டுகளைக் கடந்த ஆலயம் இது. இங்கு அம்மனோ, நவக்கிரகங்களோ கிடையாது. சித்திரை முதல் நாளில் இறைவன் வீதியுலா வருவதுண்டு.

பல ஆண்டுகளாக இங்கு உயிர்பலி தரும் பழக்கம் இருந்து வந்துள்ளது. தற்போது சில ஆண்டுகளாக அந்தப் பழக்கம் அறவே நிறுத்தப்பட்டுள்ளது. பிரகாரத்தில் வடக்குத் திசை.

 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: குழந்தைகள் பக்தர்களாக வேண்டிக்கொண்டு பிரார்த்தனை நிறைவேற்றுவது சிறப்பு.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar