Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு செங்கழுநீர்மாரியம்மன் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
அருள்மிகு செங்கழுநீர்மாரியம்மன் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: செங்கழுநீர்மாரியம்மன்
  உற்சவர்: செங்கழுநீர்மாரியம்மன்
  தல விருட்சம்: வேம்பு
  தீர்த்தம்: சிவக்குளத் தீர்த்தம்
  ஊர்: தென்மருதூர்
  மாவட்டம்: திருவாரூர்
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  நவராத்திரி, வைகாசி விசாகம், எல்லை பிடாரிக்கு கடா வெட்டி பூஜை செய்தல்.  
     
 தல சிறப்பு:
     
  திருவாரூர் தியாகராஜருக்கு இங்கிருந்து செங்கழு நீர்மலர்கள் கொண்டு சென்றதாக கூறுவது சிறப்பு.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 9 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 6.30 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு செங்கழுநீர்மாரியம்மன் திருக்கோயில் தென்மருதூர், திருக்குவளை வழி, திருவாரூர்-610207.  
   
போன்:
   
  +91 9443303020 
    
 பொது தகவல்:
     
  மகாகாளிம்மன், பெரியநாயகி, எல்லைபிடாரி, காத்தவராயன் ஆரியமாலா மற்றும் பொம்பி தனித்தனி சன்னதியில் அருள்பாலிக்கின்றனர். ஊருக்கு நடுவில், கிழக்கு நோக்கி கோயில் அமைந்துள்ளது. மகாமண்டபத்தில் சுமார் 300 பேர் அமர்ந்து தரிசனம் செய்யலாம். கற்பகிரகத்தில் ஒரு கலசம் அமைக்கப்பட்டுள்ளது.  
     
 
பிரார்த்தனை
    
  அம்மை நோய் குணமடையவும், புதிய வீடு கட்டவும்,  இடையில் கண்பார்வையற்றவர்கள் இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள்.
 
    
நேர்த்திக்கடன்:
    
  புதிய தானிங்களை வைத்து சிறப்பு படையல் செய்வதுடன், பிடாரி அம்மனுக்கு கடா வெட்டி அன்னதானம் வழங்கியும் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள். 
    
 தலபெருமை:
     
  சுமார் 300 ஆண்டுகளுக்கும் மேற்பட்டது. சிவன் கோயில் கட்டிய பின்னாளில் கட்டப்பட்டுள்ளது. அப்பகுதியை சேர்ந்த ஒரு பெண் இடையில் கண் பார்வையை இழந்துள்ளார். இக்கோயிலுக்கு வந்தவர் உனக்கு சக்தி இருந்தால் எனக்கு பார்வையை கொடு என அன்றிரவு படுத்து உறங்கினார். காலையில் எழுந்தவுடன் பார்வை தெரிந்தது. அன்றிலிருந்து பல்வேறுப் பகுதிகளில் இருந்து கண் நோய் உள்ளவர்கள் வருகின்றனர். அம்மை போட்டவர்களுக்கு இங்கிருந்து அர்ச்சனை செய்த தண்ணீர் கொடுத்தால் விரைவில் குணமடையும்.  
     
  தல வரலாறு:
     
  திருவாரூர் தியாகராஜருக்கு இங்கிருந்து செங்கழு நீர்மலர்கள் கொண்டு சென்றதால் அந்தமலர்களை மற்றவர்கள் கொய்து விடாமல் காவல் தெய்வமாக இருந்ததால் பின்னாளில் செங்கழுநீர் மாரியம்மன் என பெயர் வந்துள்ளது.
 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: திருவாரூர் தியாகராஜருக்கு இங்கிருந்து செங்கழு நீர்மலர்கள் கொண்டு சென்றதாக கூறுவது சிறப்பு.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar