கரி வரதராஜ பெருமாள் கோவில் பிரம்மோத்ஸவ விழா நிறைவு



பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையம் பிரம்மோத்ஸவ விழாவில், கரி வரதராஜ பெருமாள் தெப்பத்தேரில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

பெரியநாயக்கன்பாளையம் கரி வரதராஜ பெருமாள் திருக்கோவில், 19ம் ஆண்டு பிரம்மோத்ஸவ விழா கடந்த, 19ம் தேதி துவங்கியது. சிம்ம வாகனம், முத்துப்பந்தல், அனுமந்த வாகனம், கருட வாகனம், திருக்கல்யாண உற்சவம், யானை வாகனம், திருத்தேரில் பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். நேற்று மாலை, சேஷ வாகனத்தில் எழுந்தருளினார். இரவு தெப்பத்தேர் உற்சவம் நடந்தது. இன்று பல்லக்கு சேவை, சந்தன சேவை, தீர்த்தவாரி, சாற்றுமுறை நிகழ்ச்சியுடன் விழா நிறைவடைந்தது.

தோஷங்கள் நீக்கி செல்வ செழிப்பு தரும் மார்கழி நோன்பு; நாளை துவக்கம்

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்