பிரான்மலை குயிலமுதாம்பிகை திருக்கொடுங்குன்றநாதர் திருக்கல்யாணம்



சிங்கம்புணரி; பிரான்மலையில் குயிலமுதாம்பிகை திருக்கொடுங்குன்றநாதர் திருக்கல்யாணம் நடந்தது.

சங்க இலக்கியத்தில் பாடப்பெற்றதும், பாண்டியநாட்டு 14 திருத்தலங்களில் 5வது சிறப்புக்குரியதுமான இக்கோயில் சித்திரை திருவிழா ஏப். 13 ல் துவங்கியது. 5 ம் திருவிழாவான இன்று திருக்கல்யாணம் நடந்தது. காலை 10:20 மணிக்கு கோயில் மண்டபத்தில் மாலை மாற்றும் நிகழ்வு நடந்தது. தொடர்ந்து குயிலமுதாம்பிகை திருக்கொடுங்குன்றநாதர் திருக்கல்யாணம் நடந்தது. உமாபதி சிவாச்சாரியார் தலைமையில் வேத மந்திரங்கள் முழங்க சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டு திருக்கல்யாணம் நடத்தி வைக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். அனைவருக்கும் மஞ்சள், குங்குமம், மாங்கல்ய கயிறு பிரசாதமாக வழங்கப்பட்டது. திருக்கல்யாணத்திற்கு வந்திருந்த பக்தர்கள் மொய் எழுதிச்சென்றனர். திருவிழாவின் 9-ம் திருநாளான ஏப். 21 ல் திருத்தேரோட்டம் நடக்கிறது.

தோஷங்கள் நீக்கி செல்வ செழிப்பு தரும் மார்கழி நோன்பு; நாளை துவக்கம்

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்