பாமா, ருக்மணி, கண்ணன் கோயிலுக்கான பூமி பூஜை விழா



கீழக்கரை; கீழக்கரை அருகே குளபதம் ஊராட்சிக்குட்பட்ட வைகை கிராமத்தில் புதியதாக பாமா ருக்மணி சமேத கண்ணன் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜை விழா நடந்தது. தமிழ்நாடு யாதவ மகாசபை மாநில பொதுச் செயலாளர் வேலு மனோகரன் தலைமை வகித்தார். முதுகுளத்தூர் முன்னாள் எம்.எல்.ஏ., மலேசியா எஸ். பாண்டியன் முன்னிலை வகித்தார். வைகை யாதவ சங்க தலைவர் கர்ணன் வரவேற்றார். செயலாளர் போஸ், பொருளாளர் முருகையா, தமிழ்நாடு யாதவ மகாசபை மாநில துணைத்தலைவர் நாகேந்திரன், அரசு வழக்கறிஞர் கேசவன், முத்துராமன், மாவட்ட கவுன்சிலர் ஆதித்தன் உட்பட ராமநாதபுரம் தாலுகா யாதவ வர்த்தக சங்க நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்றனர். குளபதம் ஊராட்சி துணைத்தலைவர் மலைச்சாமி நன்றி கூறினார். பாமா ருக்மணி சமேத கண்ணன் கோயில் திருப்பணிக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது.

தோஷங்கள் நீக்கி செல்வ செழிப்பு தரும் மார்கழி நோன்பு; நாளை துவக்கம்

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்