ஆலங்குடி குரு கோயிலில் குருப்பெயர்ச்சி விழா; லட்சார்ச்சனை துவக்கம்



ஆலங்குடி: குரு பெயர்ச்சியை முன்னிட்டு, குரு பரிகார தலமான ஆலங்குடியில் இன்று லட்சார்ச்சனை துவங்கியது.

திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் அடுத்த ஆலங்குடியில், ஏலவார்குழலி சமேத ஆபத்சகாயேஸ்வரர் கோவில் உள்ளது. இது, நவக்கிரகங்களில் குரு பரிகார தலமாக விளங்குகிறது. இந்த ஆண்டு குருபகவான் வரும் மே 1 ம் தேதி புதன்கிழமை மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்குப் பெயர்ச்சி அடைகிறார். அதை முன்னிட்டு, இரண்டு கட்டங்களாக லட்சார்ச்சனை நடைபெறுகிறது. முதல் கட்ட லட்சார்ச்சனை இன்று துவங்கியது. விழாவில் ரிஷபம், மிதுனம், சிம்மம், துலாம், தனுசு, கும்பம், மீன ராசிக்காரர்களும், ஏராளமான பக்தர்களும் கலந்து கொண்டு பரிகாரம் செய்து வழிபட்டனர். முதல்கட்ட லட்சார்ச்சனை வரும் 28ம்தேதி வரை நடைபெற உள்ளது. குருப்பெயர்ச்சிக்கு பின் மே 6 முதல் 12ம் தேதி வரை இரண்டாம் கட்ட லட்சார்ச்சனை நடைபெற உள்ளது.

தோஷங்கள் நீக்கி செல்வ செழிப்பு தரும் மார்கழி நோன்பு; நாளை துவக்கம்

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்