திருப்புத்தூர்; திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு யோகபைரவருக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. குன்றக்குடி தேவஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் யோகநிலையில் பைரவர் எழுந்தருளியுள்ளார். தேய்பிறை அஷ்டமி தினங்களில் சிறப்பு வழிபாடு நடைபெறும். நேற்று காலை 11:00 மணிக்கு யோகபைரவர் சன்னதியில் சிறப்பு பூஜைகள் துவங்கின. பாஸ்கர் குருக்கள் உள்ளிட்ட சிவாச்சார்யர்களால் பூஜைகள் நடந்தது. பின்னர் மூலவருக்கு அபிேஷகம் நடந்து, சந்தனக் காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து நடந்த தீபாராதனையை பக்தர்கள் தரிசித்தனர். யாகசாலை அருகில் பெண்கள் நெய் விளக்கேற்றி வழிபட்டனர்.