கொடைக்கானல்; கொடைக்கானல் பத்ரகாளியம்மன் கோயிலில் தேய்பிறை அஷ்டமி பூஜை நடந்தது. இங்குள்ள கால பைரவருக்கு அபிஷேக, ஆராதனை மற்றும் பூஜைகள் நடந்தது. பக்தர்கள் தேங்காய், நெய், மிளகு தீபம் ஏற்றி வழிபட்டனர். சுவாமிக்கு வடைமாலை சாத்தப்பட்டது. அலங்காரத்தில் காட்சியளித்த காலபைரவரை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.