அவிநாசி ; போதுமான மழை பெய்யாததால் பல விவசாயிகள் கோடை உழவு செய்ய முடியாமல் ஏமாற்றத்தில் உள்ளனர். நல்ல மழை பெய்து நாடு செழிக்க வேண்டி தெற்கு அவிநாசி பாளையம் ஊராட்சி செம்மாண்ட கவுண்டன்புதுாரில் ஸ்ரீ மாகாளியம்மன், ஸ்ரீ செல்வ விநாயகருக்கு சிறப்பு யாக பூஜை நடந்தது. வேத மந்திரங்கள் முழங்க கோவில் குருக்கள் நீர் நிறைந்த அண்டாவில் அமர்ந்து பிரார்த்தனை செய்தார்.