ஆலங்குடி, திட்டையில் குருப்பெயர்ச்சி விழா; குருபகவானுக்கு சிறப்பு அபிஷேகம்



நீடாமங்கலம்; நீடாமங்கலம் அருகே, ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவிலில், குருபெயர்ச்சி விழா நடந்தது.


திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் அருகே ஆலங்குடியில் அமைந்துள்ள ஆபத்சகாயேஸ்வரர் கோவிலில், தனி சன்னிதியில், குருபகவான் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இக்கோவில், நவகிரஹங்களில் ஒன்றான குருபகவான் பரிகார ஸ்தலமாக விளங்குகிறது. குருபெயர்ச்சியை ஒட்டி, குருபகவானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. நேற்று மதியம், 1:19 மணிக்கு, ரிஷப ராசியில் இருந்து, மிதுன ராசிக்கு குருபகவான் பெயர்ச்சி அடைந்தார். குருபெயர்ச்சி அடைந்தவுடன், மகாதீபாராதனை நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள், நீண்ட வரிசையில் நின்று குருபகவானை வழிபட்டனர். போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.


திட்டை வசிஷ்டேஸ்வரர்; தஞ்சாவூர் அடுத்த திட்டை வசிஷ்டேஸ்வரர் கோவிலில், சுவாமிக்கும், அம்பாளுக்கும் இடையில், நவகிரஹங்களில் சுபகிரகமான குருபகவான், எங்கும் இல்லா சிறப்போடு தனி சன்னிதியில் ராஜகுருவாக எழுந்தருளி அருள்பாலித்து வருகிறார். குருபகவான் நேற்று மதியம், 1:19 மணிக்கு ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு பெயர்ச்சியடைந்தார். இதையடுத்து, குருபாகவனுக்கு தங்க கவச அலங்காரம் செய்யப்பட்டு, மகாதீபாரதனை காண்பிக்கப்பட்டது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். குருபெயர்ச்சியின் தொடர்ச்சியாக, மே 23ம் தேதி லட்சார்ச்சனையும், 24, 25ம் தேதிகளில் சிறப்பு பரிகார ஹோமமும் நடைபெற உள்ளது.


வைகுண்ட ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பது எப்படி?

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்