சித்தாபுதூர் முத்துமாரியம்மன், சக்தி கணபதி கோவிலில் கும்பாபிஷேக ஆண்டு விழா



கோவை; சித்தாபுதூர் வெங்கடசாமி ரோட்டில் அமைந்துள்ள முத்துமாரியம்மன் - ஸ்ரீ சக்தி கணபதி - ஸ்ரீ சக்தி முருகன் கோவில் 50-ம் ஆண்டு விழா மற்றும் முதலாம் ஆண்டு கும்பாபிஷேக விழா  கடந்த 2ம் தேதி கணபதி ஹோமத்துடன் துவங்கியது. அதை தொடர்ந்து கோவில் வளாகம் முன்பு அக்னி கம்பன் நடந்ததா நடைபெற்றது. 6ம் தேதி அன்று மாலை திருவிளக்கு வழிபாடு நடைபெற்றது. மூலவர் முத்துமாரியம்மன், வாராகி அம்மன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தொடர்ந்து வரும் 9ம் தேதி கத்தி கழுவுதல், அம்மனை அழைத்தல் ஆசியன நடைபெறுகிறது. அதை தொடர்ந்து வரும் புதன்கிழமை 11ம் தேதி காலை சக்தி கரகம் அழைத்தல், மதியம் அலங்கார பூஜை, மாலை மாவிளக்கு பூஜை, அம்மன் திருவீதியுலா நடைபெறும். அடுத்த நாள் நிகழ்வாக மஞ்சள் நீராடல் நிகழ்ச்சி நடைபெற்று மகா அன்னதானம் நடைபெறுகிறது. அதை தொடர்ந்து இரவு மறுபூஜையுடன் நிகழ்ச்சி நிறைவு பெறும் என்று கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


வைகுண்ட ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பது எப்படி?

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்